search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாசரேத்-மாதாவனம்  புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா
    X

    சிறப்பு திருப்பலி நடைபெற்ற காட்சி.

    நாசரேத்-மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா

    • நாசரேத்-பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவின் 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் மாலை 6 மணி ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    நாசரேத்:

    நாசரேத்-பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாளன்று ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை நடைபெற்றது. தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா, சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் மாலை 6 மணி ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    திருவிழா 9-ம் நாளன்று ஜெபமாலை, திருவிழா ஆரா தனை தூத்துக்குடி அருள்வளன் ஆயர் இல்லத்தந்தை ரூபர்ட் தலைமையில் நடைபெறுகிறது. மறையுரையை அருட்திரு ஜேம்ஸ் விக்டர் ஆற்றுகிறார். சிறப்பு நிகழ்வாக சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

    8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு 10-ம் நாள் திருவிழா திருப்பலி மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட் தலைமையில் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி ஆயர் இல்ல அருட்தந்தை இசிதோர் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் நாசரேத்-மாதாவனம் இறைமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×