என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

    • கூடச்சேரி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது.
    • அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை யில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே கூடச்சேரி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விழிப்பு ணர்வு முகாம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளாண்மைதுறை, வரு வாய்துறை, கால்நடைத் துறை , மின்சாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை யில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.

    அரசு மானியத் திட்டங் கள் பற்றி அறிந்து கொள்ள வும் மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் உழவன் செயலியை பயன்படுத்துவது குறித்தும் தெரிவிக்கப் பட்டது.நடப்பாண்டிற்கு காய்கறி விதைகள், நாற்று கள், பழச்செடிகள் ஆகியவை தோட்டக்கலைத் துறை மூலம் கூடச்சேரி கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை உதவி அலுவலர் சிவமாணிக்கம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தோட்டக் கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் சிவமாணிக்கம், ரவி, வேளாண்மை உதவி அலுவலர் பூபதி, கால்நடை மருத்துவர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் முத்துசெழியன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×