search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு நகராட்சி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து தொடங்கிவைத்த காட்சி.

    திருச்செங்கோடு நகராட்சி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், கே.எஸ்.ஆர் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் சரத் அசோகன், நர்சிங் கல்லூரி முதல்வர் ருத்ரா மணி, நகர் மன்ற உறுப்பினர்கள் ராதா, சேகர், மகேஸ்வரி, செல்வி ராஜவேல், செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், தாமரைச் செல்வி மணிகண்டன், திவ்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி 4 ரத வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் சென்றவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகளை ஏந்தியபடி சென்றனர்.

    Next Story
    ×