search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி வாலிபர் பலி
    X

    மனைவியை பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி வாலிபர் பலி

    • பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார்.
    • மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.

    கரூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக பிரபாத் தனது மோட்டார்சைக்கிளில் கரூரில் இருந்து திருச்செங்கோடு வழியாக செல்வதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் செல்லும் பிரிவு சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி பிரபாத் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் பிரபாத்தை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×