என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாய்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதி மருமகன் பலி - மாமனார் படுகாயம்
- நாமகிரிப்பேட்டையில் இருந்து புதுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பேளுக்குறிச்சி அருகே வேலப்பட்டியை சேர்ந்த தனது மாமனாரான கருப்பண்ணன் (65) என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- குடிநீர் குழாய்கள் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள புதுப்பட்டி வாணி கிணறு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (45). இவர் பெட்ரோல் பங்க் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் நாமகிரிப்பேட்டையில் இருந்து புதுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பேளுக்குறிச்சி அருகே வேலப்பட்டியை சேர்ந்த தனது மாமனாரான கருப்பண்ணன் (65) என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
குடிநீர் குழாய்கள்
புதுப்பட்டி செல்லும் வழியில் உள்ள ஈச்சம்பாறை அருகே சென்றபோது சாலையோரத்தில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய்கள் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது மாரியபப்பன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்த கருப்பண்ணன் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






