search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய பிரதேசத்தில் விபத்து ரிக் வண்டி உரிமையாளருக்கு ரூ.3.3 லட்சம் இழப்பீடு
    X

    மத்திய பிரதேசத்தில் விபத்து ரிக் வண்டி உரிமையாளருக்கு ரூ.3.3 லட்சம் இழப்பீடு

    • தேவராஜன் (வயது 42). இவர் சொந்தமாக போர்வெல் அமைக்கும் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, இவருக்கு சொந்தமான ரிக் வண்டி விபத்துக்குள்ளானது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 42). இவர் சொந்தமாக போர்வெல் அமைக்கும் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, இவருக்கு சொந்தமான ரிக் வண்டி விபத்துக்குள்ளா னது. இது சம்மந்தமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்ம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    விபத்துக்குள்ளான ரிக் வண்டிக்கு இழப்பீடு கேட்டு அவர், வாகன இன்சூரன்ஸ் செய்திருந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

    ஆனால் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக கூறி இழப்பீடு தர முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் வாகன உரிமையாளர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். வாகனத்தில், கூடுதலாக 2 நபர்களை அழைத்துச் சென்றதால்தான் விபத்து நடந்தது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் கோர்ட்டில் நிரூபிக்கவில்லை. ரிக் வண்டி உரிமையாளருக்கு, வாகனத்தை ரிப்பேர் செய்ததற்கான செலவு ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை, 2016 முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்கவும், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிம் வழங்கவும் நுகர்வோர் கோர்ட், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×