search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லிமலை அரசு பள்ளியில்சமையலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    கொல்லிமலை அரசு பள்ளியில்சமையலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    • கொல்லிமலை செங்கரையில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
    • இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரை யில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் கலை தெரிந்த பழங்குடியினர் இனத்தி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது உச்ச வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    சமையலர் (ஆண்) 2 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயிரம் வீதம் வழங்கப்ப டும். உதவி சமையலர் (பெண்) 3 பணியிடங்க ளுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். துப்புரவா ளர் (ஆண், பெண்) 1 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 5,200 வழங்கப்படும்.

    இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை, வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் கொல்லிமலை, தாலுகா அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் அல்லது செங்கரை, ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வந்துசேருமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×