search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்புவருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். 

    பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்புவருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பூபாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம், துறையூரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கி காயப்படுத்திய தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களை கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்கக்கோரி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் பூபாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள் தாக்கப்பட்டு வருவதை தடுக்க கோரியும், இனிவரும் காலங்களில் வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முத்துசெழியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×