search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி
    X

    நாமக்கல்லில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி

    • தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 129 பணிக்காலியிடங்கள் கொண்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள், 621 பணிக்காலி யிடங்கள் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு புதிதாக அறிவிக்கப்பட் டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் onlineclassnkl@gmail.com என்ற இ.மெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் சுயவிவரத்தினை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×