search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்கள்
    X

    பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்கள்

    • மூன்று பேர் மின்னல் வேகத்தில் வந்து கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர்.
    • கூச்சல் போட்டதால் திருடர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நேற்று வழக்கம் போல வாரச்சந்தை நடைபெற்றது.

    பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று மாலை சந்தைக்கு சென்று காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ரிஜிஸ்டர் ஆபீஸ் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் மின்னல் வேகத்தில் வந்து தேவி என்பவரின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்தனர்.

    கழுத்தில் நக கீரல் பட்டதால் செயினை இருக்கமாக பிடித்துக் கொண்டார். உடன் வந்த பெண்கள் கத்தி கூச்சல் போட்டதால் செயினை அறுக்க முடியாத திருடர்கள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராவூரணி போலீசார் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக கூறினர்.

    பேராவூரணி காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசார் நியமித்து தீபாவளி பண்டிகை மற்றும் கூட்டம் நேரங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×