என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் காதலனுடன் மாயமான அழகுகலை பெண் நிபுணர்
    X

    கோவையில் காதலனுடன் மாயமான அழகுகலை பெண் நிபுணர்

    • இளம்பெண் தன்னை தேட வேண்டாம் என பெற்றோரிடம் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கீரநத்தத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மாலையில் அவர் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இந்தநிலையில் தனது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை தேட வேண்டாம் எனவும், காதலிக்கும் வாலிபருடன் செல்வதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் தகவல் தெரிவித்து விட்டு வாலிபருடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×