search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    உடன்குடி பஜார் சந்திப்பில் ஒரு வழிப்பாதை மீறப்படும் காட்சி.


    உடன்குடியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

    • உடன்குடி 4 பஜார் சந்திப்பில் போலீசார் இல்லை என்றால் உடனேஒரு வழிப்பாதை மீறப்படுகிறது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் ரோடு ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தபடுகிறது.இந்த சாலையில் எதிரே எதிரே வாகனங்கள் வந்தால் ஒன்றைஒன்று கடந்து செல்வது மிக மிக கடினம். அதனால் உடன்குடிகீழபஜார் ரோடு மட்டும் ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. உடன்குடி 4 பஜார் சந்திப்பில் போலீசார் இல்லை என்றால் உடனேஒரு வழிப்பாதை மீறப்படுகிறது.

    ஏராளமான வாகனங்கள் கிழக்கு நோக்கி செல்வதால் அடிக்கடி கீழபஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.இதனால்பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே ஒரு வழிப்பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×