என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
- கோடை காலங்கள் மட்டுமல்லாமல், சாதாரண நாட்களிலும் கூட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.
- இந்த சாலையில் கடந்தசில நாட்களாக கழிவுநீர் வழிந்ேதாடுகிறது.
ஊட்டி:
ஊட்டி நகரின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று எட்டின் சாலை. இந்த சாலையில் கனரக வாகனங்களும், சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் செல்லும் முக்கியமான சாலையாக உள்ளது.
இந்த சாலையில் இரண்டு மூன்று மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் முக்கிய அலுவலகங்கள் வங்கிகள் என்று அனைத்து நிறுவனங்களும் செயல்ப ட்டு வருகிறது. இதனால் எப்போது வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படு கிறது.கோடைகா லங்களில் அதிகளவில் காணப்படும்.
கோடை காலங்கள் மட்டுமல்லாமல், சாதாரண நாட்களிலும் கூட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் எப்போதும் இந்த சாலை மிகுந்த பரபரப்பாகவே காணப்படும்.
இந்த நிலையில் இந்த சாலையில் கடந்தசில நாட்களாக கழிவுநீர் வழிந்ேதாடுகிறது. மேலும் சாலை மிகவும் மோசம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுவதும் தொடர் கதை யாகி வருகிறது. எனவே இந்த சாலையினை உடனடி யாக சீரமைத்து தர வேண்டும் . அதற்கு தகுந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஊட்டி நகர மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்