என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செஞ்சியில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்8 May 2023 6:00 AM GMT
- வடவானூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35). அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவு செஞ்சியிலிருந்து வடவானூர் நோக்கி வந்தனர்.
- அப்போது திண்டிவனம் சாலை நீதிமன்ற வளாகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது அதற்கு முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
விழுப்புரம்:
செஞ்சி அருகே வடவானூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35). அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவு செஞ்சியிலிருந்து வடவானூர் நோக்கி வந்தனர். அப்போது திண்டிவனம் சாலை நீதிமன்ற வளாகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது அதற்கு முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வடிவேலு மற்றும் ராமச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலத்த காயம் அடைந்த வடிவேலு மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக இறந்தார்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X