search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை எம்.எல்.ஏ ஆய்வு
    X

    பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    நாகை புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை எம்.எல்.ஏ ஆய்வு

    • 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
    • இடத்தின் தன்மை மற்றும் நில எடுப்பு பணிகள் குறித்து விளக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

    இதையடுத்து நாகை கிழக்கு கடற்கரை சாலையில், செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் சுமார் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நாகப்பட்டினம் வட்டாட்சியர், நாகை நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் இடத்தின் தன்மை மற்றும் நில எடுப்புப் பணிகள் குறித்து விளக்கினர்.

    Next Story
    ×