என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் நள்ளிரவில் விபத்து- அடையாளம் தெரியாத வாகனம் மோதி இஸ்ரோ மைய ஊழியர் பலி
    X

    வள்ளியூரில் நள்ளிரவில் விபத்து- அடையாளம் தெரியாத வாகனம் மோதி இஸ்ரோ மைய ஊழியர் பலி

    • சுப்ரமணியன் பவர் பிளாண்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகன் சுப்ரமணியன் (வயது 38).

    இஸ்ரோ மைய ஊழியர்

    இவர் பணகுடியை அடுத்த மகேந்திரகிரி மலையில் அமைந்திருக்கும் மத்திய அரசின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள பவர் பிளாண்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வள்ளியூர் பைபாஸ் நான்கு வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×