search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    சிவகிரியில் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப பட்டது.

    சிவகிரி:

    சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி, கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய பெண்கள் முன்னேற்ற கழகம் ஆகியவைகளின் சார்பாக சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பாக நகர செயலாளர் குருசாமி தலைமையில், நகர தலைவர் பழனி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை சிவகிரி பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிரந்தரமான முறையில் தொடர்ந்து சுத்தமான குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அய்யப்பன், அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் ஆயூப்கான், அகில இந்திய பெண்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பிச்சைமணி ஆகியோர் பேசினர்.

    இதனைத்தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட வேண்டும் அவற்றின் மூலம் ஏழை- எளிய மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபுவிடம் அளித்து, இக்கோரிக்கையை சிவகிரி பேரூராட்சி பகுதி மக்களின் நலன் வாழ்விற்காக செயல்படுத்த வலியுறுத்தித்தினர்.

    Next Story
    ×