என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி திடீர் தற்கொலை
Byமாலை மலர்27 Jun 2022 7:51 AM GMT
- மேச்சேரி அருகே 3 பெண்களை திருமணம் செய்த தொழிலாளி திடீர் தற்கொலை செய்துகொண்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள கொப்பம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 70). இவருக்கு 3 மனைவிகள். எனினும் தற்போது அவர்களுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்தார்.
இவருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் தனியாக வசித்து வந்த சேட்டு கடந்த 22-ந்தேதி வீட்டின் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சேட்டுவின் சகோதரி பழனியம்மாள் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். மேச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X