என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக வழிபாடு நடந்தது.
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக வழிபாடு
- சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார்.
இக்கோயிலில் காஞ்சிபுரத்தை தலைமை யிடமாக கொண்டுள்ள ஆதி சைவாச்சாரியார் தேசிகர் சங்கத்தினை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மண்டல அபிஷே கம் நடந்தது.
முன்னதாக ஆண்டவினாயகர், பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்பாள், முத்துசட்டைநாதர்சுவாமி, திருஞானசம்பந்தர்சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.பின்னர் நடைபெற்ற சுக்ரவார வழிப்பாட்டில் பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முத்துசட்டைநாதர்சுவாமி சிறப்பு வழிபாடும், மலைமீது அருள்பாலிக்கும் சட்டைநாதர் சுவாமிக்கு புனுகுசாத்தி, பயர்பாயாசம், வடை நிவேதனம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளாக ஆதி சைவாச்சாரியார் சங்கத்தினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருவேற்காடு அரிமா முனைவர் .சம்பந்தம் மற்றும் ஆத்மநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






