search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா சிவராத்திரி; தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்
    X

    பெருவுடையாருக்கு சந்தனம், பால், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    மகா சிவராத்திரி; தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

    • நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு கால அபிஷேகம்.
    • மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு நேற்று இரவு 10 மணி, நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி என நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    சந்தனம், பால், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிசேகம் நடைபெற்றது.

    பக்தர்கள் கூட்டம்

    சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் மட்டும் அல்லாமல் விடிய, விடிய பக்தர்கள் சிவனை வழிபட்டனர். இன்று அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    சிவராத்திரி விழாவையொட்டி தஞ்சை திலகர் திடல் அருகே அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.

    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

    கலைநிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொ) சூரியநாராயணன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர்செல்வம், மண்டலக்குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள்

    அதைத்தொடர்ந்து மீரா குழுவினரின் கயிலாய வாத்தியம், லட்சுமணன் வாத்தியாரின் தெருக்கூத்து, காமாட்சி பத்மா குழுவினரின் நாத இசை சங்கமும், சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இசை, புலவர் ராமலிங்கம் குழுவினரின் பட்டிமன்றம், தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் பறை இசை, காவடி, கரகாட்டம், நையாண்டி மேளம், சிவன்சக்தி நடனம், கலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியம், தியசோனவின் குச்சிப்புடி நடனமும் நடைபெற்றது. நிறைவாக தொலைக்காட்சி புகழ் பாடகர்களின் பக்தி இசை பாடல்கள் நடைபெற்றது. விடிய விடிய நடந்த நிகழ்ச்சிகளை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

    இதேபோல் தஞ்சபுரீஸ்வரர் கோவில், மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றது.

    Next Story
    ×