என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையத்தை சூறையாடிய வாலிபர் கைது
    X

    போலீஸ் நிலையத்தை சூறையாடிய வாலிபர் கைது

    • காரை நிறுத்தியதில் தகராறில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அதில் இருந்தவர் போலீஸ் நிலையம் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார்.

    மதுரை

    மதுரை கொட்டாம் பட்டியில் சப்-இன்ஸ்பெக்ட ராக வேலை பார்த்து வருபவர் சிவகுருநாதன். சம்பவத்தன்று மாலை அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்தவர் போலீஸ் நிலையம் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார்.

    உடனே சிவகுருநாதன், "காரை ரோட்டு ஓரத்தில் நிறுத்த வேண்டியதுதானே?" என்று கூறியுள்ளார். இது ெதாடர்பாக அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை சூறையாடினார்.

    இது தொடர்பாக சிவகுருநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொட்டாம்பட்டி போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் மேலூர் கச்சிராயன் பட்டியை சேர்ந்த துரை என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் புகுந்து பொருட்களை சூறையாடிய குற்றத்துக்காக துரையை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×