என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- மதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மதிச்சியத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. எனவே அவரை பெற்றோர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போதுஅவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மதுரை தல்லாகுளம் அனைத்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் இது தொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் மாணவியும், மேளக்காரர் தெருவை சேர்ந்த பாபு மகன் வசந்தகுமார் (வயது 19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அவரது வீட்டிற்கு மாணவி சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.
இது தொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்