search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
    X

    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    • மதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மதிச்சியத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. எனவே அவரை பெற்றோர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போதுஅவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மதுரை தல்லாகுளம் அனைத்து போலீசில் புகார் கொடுத்தனர்.

    இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் மாணவியும், மேளக்காரர் தெருவை சேர்ந்த பாபு மகன் வசந்தகுமார் (வயது 19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அவரது வீட்டிற்கு மாணவி சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×