என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/04/1909281-valibar-thukuthu-tharkolai.webp)
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தூம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அஜித்குமார்(வயது24), கூலி தொழிலாளி.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
கடந்த 2-ந் தேதியும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, கணவனும், மனைவியும் தனித்தனி அறைகளில் தூங்க சென்றனர். நள்ளிரவு நேரத்தில் விழித்த அஜித்குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கில் தொங்கினார். பக்கத்து அறையில் சத்தம் கேட்டு காளீஸ்வரி வந்து பார்த்தபோது அஜித்குமார் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரு வருடத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)