என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
பெண் தீக்குளித்து தற்கொலை
- குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
- கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பழைய நெடுங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்சவள்ளி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுக ளாகிறது. குழந்தை இல்லை. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அம்சவள்ளி நேற்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுபற்றி கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






