search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்து இறந்த வாலிபர் யார்?
    X

    மயங்கி விழுந்து இறந்த வாலிபர் யார்?

    • மயங்கி விழுந்து இறந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.

    மதுரை

    மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோவில் அருகில் கடந்த 20-ந் தேதி இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மயங்கி கிடந்தார். தகவலறிந்த அயன்பாப்பாக்குடி கிராம உதவியாளர் செல்லப்பாண்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நெற்றியில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×