search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி மூதாட்டி பலி
    X

    விபத்து

    வாகனம் மோதி மூதாட்டி பலி

    • வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி மூக்கம்மாள் (வயது75). இவர் கடந்த 9-ந்தேதி சின்னசெங்குளத்தில் உள்ள மகன் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையை மூக்கம்மாள் கடக்க முயன்றபோது அடையாளம்தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மூக்கம்மாள் நேற்று இறந்தார். இதுபற்றி மகன் கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×