என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாக திருவிழா. ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் உற்சவர் சன்னதி யில் இருந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் புஷ்பஅங்கி அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டபத்தை 3 முறை சுற்றி வந்து அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு தீபாராதனை காட்டினர்.
இதேபோல வருகிற 1-ந் தேதி வரை இந்த வைபவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகம் நடக்கிறது.இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணியள வில் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு தங்க குடத்தில் சிறப்பு பாலா பிஷேகம் நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் அருகே உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் பால்குடங்கள் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.
இந்த விழாவில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்து வருவார்கள். மேலும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பாலால் சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மின்விசிறிகளும் ஏர்கூலரும் வைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்-மோர் வழங்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்