search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா
    X

    திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா

    • திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.
    • சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று நடைபெறும். அதன்படி நேற்று இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. இதற்காக வைகை ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டு அதில் ஏடுகளை மிதக்கவிடப்பட்டது. அப்போது ஏடுகள் எதிரேறி வந்தன. பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ஏடு எதிரேறிய வரலாற்றை ஓதுவார்கள் விளக்கினர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன்செட்டியார், கோவில் பணியாளர்கள் பிரதோஷ கமிட்டியினர் கலந்து கொண்டனர். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×