search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
    X

    நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

    • வணிக வரித்துறை உதவி கமிஷனர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டுபட்டுள்ளது.
    • வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர், லேக் வியூ கார்டன் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 64). வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றார். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மகாலிங்கம் கடந்த 3-ந் தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பொருட்கள் திருடுபோய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×