search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிய அறிவுறுத்தல்
    X

    போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய காட்சி.

    இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிய அறிவுறுத்தல்

    • மதுரை மாநகர பகுதியில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுரை கூறினர்.
    • இந்த நடைமுறை பல்வேறு மாவட்டங்களில் அமலுக்கு வந்தன.

    மதுரை

    தமிழகத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நடைமுறை பல்வேறு மாவட்டங்களில் அமலுக்கு வந்தன.

    மதுரை மாநகரில் போக்குவரத்து விதி–முறைகளை மீறுவோர் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்்ந்து பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி (தெப்பக்குளம்), சுரேஷ் (தல்லாகுளம்), கணேஷ் ராம் (தெற்கு வாசல்) உள்ளிட்ட அதிகாரிகள், நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஒட்டிய 545 பேரும், பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணித்த 194 பேரும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 23 பேரும் பிடிபட்டனர். அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    மேலும் யூனிபார்ம் அணியாமல் ஆட்டோவை ஓட்டிய 74 டிரைவர்களும் பிடிபட்டனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை மாநகரம் முழுவதும் பஸ் நிறுத்தங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவ- மாணவிகளிடம் பஸ்சுக்குள் செல்லும்படி அறிவுறுத்தினர்.

    பஸ் நிறுத்தங்களில் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

    Next Story
    ×