search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு
    X

    கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு

    • கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் சாவில் மர்மம் நீடிக்கிறது.
    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையில் வடுகபட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

    இதுகுறித்து அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை கொன்று கிணற்றில் வீசியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13 நாட்களாகியும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இறந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டி ருந்ததால் கொலை செய்து கொண்டு வந்து இந்த கிணற்றில் வீசி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்து வரும் வழியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட காவல் நிலையங்களுக்கும் தகவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இறந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியாததால் சமீபத்தில் யாரேனும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன பெண் பற்றிய புகார் ஏதும் உள்ளதா? என்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இறந்த பெண், ரோஸ் கலர் சுடிதார், காட்டன் பேண்ட், அணிந்துள்ளார், காலில் கருப்பு கயிறு கட்டியுள்ளார்.

    இது தவிர இந்த பெண்ணின் சடலத்தை காரில் தான் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத், உத்தர வின்பேரில், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் கொண்ட தனி படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×