என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் வாலிபர் சாவு
    X

    விபத்தில் வாலிபர் சாவு

    • விபத்தில் வாலிபர் இறந்தார்.
    • பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சோலங்குருணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(24). இவர் திருப்பூரில் வேலை பார்த்தார். ஊருக்கு வந்த இவர் வலையங்குளத்தை சேர்ந்த இருளப்பன் மகன் மூர்த்தி(24) என்பவருடன் நல்லூர் பகுதியில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை மூர்த்தி ஓட்டினார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் மூர்த்தி படுகாயமடைந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×