search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளழகர் தோற்றத்தில் வைகை ஆற்றில் இறங்கிய சுந்தரராஜ பெருமாள்
    X

    கள்ளழகர் தோற்றத்தில் வைகை ஆற்றில் இறங்கிய சுந்தரராஜ பெருமாள்

    • தேனூர் கிராமத்தில் கள்ளழகர் தோற்றத்தில் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
    • ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் (கள்ளழகர்) கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி இன்று காலை சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.

    அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சக்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பூஜைகள் நடந்து வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திரு விளக்கு பூஜை நடைபெறும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது. 2 நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்க ளுக்கு புத்தாடை வழங்கப் படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.

    இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடக்கிறது. சுவாமி கோவில் வந்து சேருவார். பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் பொருளாளர் கவுதமன் உள்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×