search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் பஸ்சில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை
    X

    நாகலட்சுமி பயணம் செய்த அரசு பஸ்சையும், சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட நாகலட்சுமி ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட காட்சியையும் படத்தில் காணலாம்.

    ஓடும் பஸ்சில் இருந்து குதித்து 5 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

    • 5 பெண் குழந்தைகளின் தாய் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கலெக்டருக்கு எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது.



    தற்கொலை செய்து கொண்ட நாகலட்சுமியையும், தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள் சண்முகபிரியா, பாண்டி சிவானி.

    திருமங்கலம்

    மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி, சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கணேசன் கோவையில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் நாகலட்சுமி தனது 5 குழந்தைகளுடன் மையிட்டான்பட்டியில் வசித்து வந்தார். 5 பெண் குழந்தைகள் இருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் வழங்கினார். இதையடுத்து அந்த பணிக்கு நாகலட்சுமி சென்று வந்தார்.

    அப்போது மையிட்டான் பட்டி கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகிய 3 பேரும் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி, அவருக்கு வேலை தரமுடியாது என கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த நாக லட்சுமி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    ஆனால் அதன்பிறகும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேர் மீதும் நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் இன்று தனது கைக்குழந்தைகளான சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் சென்றார்.

    அந்த பஸ் சிவரக்கோட்டை அருகே வந்தபோது, நாகலட்சுமி தனது 2 குழந்தைகளையும் அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு திடீரென ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். கண்ணை மூடி திறப்பத்திற்குள் நடந்த இந்த சம்பத்தை பார்தது பஸ்சில் இருந்தவர்கள் அதிச்சியடைந்து அலறினர்.

    இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மற்றும் சக பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர். பஸ்சில் இருந்து குதித்த நாகலட்சுமி படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    தங்களுடன் பயணித்து வந்த பெண் பஸ்சில் இருந்து குதித்து படுகாயமடைந்து கிடப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். படுகாய மடைந்து சாலையில் கிடந்த நாகலட்சுமியை பார்த்து அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதன. இதனை தொடர்ந்து நாகலட்சுமி அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே நாகலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் கொடுப்பதற்காக நாகலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளார்க் தன்னை அவதூறாக பேசி மன வருத்தத்தை ஏற்படுத்தி யதாகவும், மேலும் வேலை தரமுடியாது என மிரட்டியதாகவும் எழுதி இருந்தார்.

    இந்த காரணத்தாலேயே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் எனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அந்த கடிதத்தை கைப்பற்றி, அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×