என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சனி பிரதோஷ வழிபாடு
    X

    சனி பிரதோஷ வழிபாடு

    • சோழவந்தான் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நந்திக்கு 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பா.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா, கவுன்சி லர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவேடகம் ஏடகநாத சுவாமி கோவிலில் நடந்த வழிபாட்டில் சனி பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவால வாநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்க ளில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×