search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
    X

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

    • பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். மைக்குடியை சேர்ந்த அஜித்(எ)அழகு பாண்டி (வயது21) என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அவரை தொந்தரவு செய்து வந்தார்.

    இது குறி்த்து மாணவியின் தாய் கொடு்த்த புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து வாலிபர் அஜித்(எ)அழகுபாண்டியை தேடி வருகின்றனர்

    திருமங்கலத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கப்பலூர் சின்னகாமன் மகன் கார்த்திக்(20) என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    இதனால் மாணவி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×