என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது
- ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைதானார்.
- மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சோலை மகன் முத்து என்ற கொரில்லா முத்து (வயது 45). இவா் மீது 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கொரில்லா முத்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. எனவே அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகா் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், கொரில்லா முத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்து உள்ளனர்.
மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக வரும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி மூட்டைகளை கிட்டங்களில் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்