search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்: செல்லூர் ராஜூ
    X

    மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்: செல்லூர் ராஜூ

    • மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    • மதுரையில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தை அடுத்து அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும். இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரு சேர முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்கி உள்ளோம்.

    என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா? அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதா, அவர்களையும் ஏற்றுக்கொண்டு கட்சியில் பதவிகளை வழங்கினார்.

    அதுபோல தற்போது அ.தி.மு.க.வை விட்டு விலகி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.

    வருகிற 25-ந் தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினருடன் சேர்ந்து பொதுமக்களும் திரளாக பங்கேற்று இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×