search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி எரித்துக்கொலை?
    X

    மூதாட்டி எரித்துக்கொலை?

    • மூதாட்டி எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • படித்துறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    மதுரை

    மதுரை வடக்குமாசி வீதியை சேர்ந்தவர் சரோஜா(வயது80). இவர் சம்பவத்தன்று பேச்சியம்மன் படித்துறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே சரோஜாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சரோஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் சரவணன், திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை யாராவது எரித்துக்கொலை செய்தார்களா? அல்லது தனக்கு தானே உடலில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×