என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகமலை புதுக்கோட்டை முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தி மீண்டும் கைது
- நாகமலை புதுக்கோட்டை முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
- போலீஸ் அதிகாரி வசந்தியை தனிப்படை போலீசார் தரதரவென இழுத்து சென்றனர்.
மதுரை
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வசந்தி வேலை பார்த்தார். அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டெய்லரிடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வசந்தி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரை போலீசார் கைது செய்வதில் மும்முரம் காட்டினர்.
இதனை தொடர்ந்து வசந்தி தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கோத்தகிரி ஓட்டலில் வசந்தி பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த நிலையில் வசந்தி சாட்சிகளை மிரட்டிய தாக குற்றச்சாட்டு வெளி யானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் வசந்தி இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து வசந்தி தப்பிக்க முயன்றார். போலீசார் குண்டு கட்டாக வசந்தியை தூக்கி தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, வசந்தி சாட்சி களை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தியை தனிப்படை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்