search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு: நிரந்தரம் சட்டம் கொண்டு வந்தவர் மோடி ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
    X

    விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அருகில் கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்பட பலர் உள்ளனர்.

    ஜல்லிக்கட்டு: நிரந்தரம் சட்டம் கொண்டு வந்தவர் மோடி ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

    • ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நிரந்தரம் சட்டம் கொண்டு வந்தவர் மோடி என ஓ.பன்னீர் செல்வம் பேட்டியில் பேசினார்.
    • தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர்

    அவனியாபுரம்

    சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது அன்று தமிழக அரசு சார்பில் முதல்வராக இருந்த நான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அவரின் உதவியால் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்கின்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் தற்போது வரை அப்படியே இருக்கிறது.

    தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர். அதற்கு தமிழக அரசு தான் உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், ஐயப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையத்துரை மாரி, ஒத்தக்கடை பாண்டியன், தேன் சுகுமாறன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, மார்க்கெட் ராமமூர்த்தி, உசிலை பிரபு, ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அருகில் கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×