search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை தொடக்கம்
    X

    பங்குனி திருவிழாவையொட்டி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அலங்கார பந்தல் ேபாடப்பட்டுள்ளது.

    மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை தொடக்கம்

    • மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை தொடங்குகிறது.
    • வருகிற 15-ந் தேதி பால்குடம், தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இது மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்ததாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி மாரியம்மன் இன்று (திங்கட்கிழமை) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்த டைகிறார். அங்கு கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும்.

    நாளை (11-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி காட்சி அளிப்பார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரரிடம் இருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து 4 சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்ற டைவார்.

    அங்கு இரவு 11மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    5-ம் நாளான 15-ந்தேதி இரவு 7.25 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். அன்று மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து காட்சி அளிப்பார்.

    7-ம் நாளான 17-ந்தேதி திருவிளக்குபூஜையும், பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு 18-ந்தேதியும் நடக்கிறது. 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    20-ந்தேதி காலை 6 மணி முதல் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் இரவு 7.25 மணிக்கு மேல் தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×