என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த அணி திரள்வோம்: ராஜன்செல்லப்பா அறிக்கை
- எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த அணி திரள்வோம் என ராஜன்செல்லப்பா அறிக்கையில் கூறினார்.
- எடப்பாடியாரை அரியணை அமர்த்திடும் கால்கோள் விழாவாக இந்த எழுச்சி மாநாடு அமையும்
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், அ.தி.மு.க .மண்டல செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது நல்லாசியுடன் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடியாரின் சீரிய தலைமையில் மதுரை யில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக் கிழமை) மிக பிரம்மாண்ட மாக நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் சங்கமிக்கிறார்கள். இந்த வெற்றி சரித்திரம் படை க்கும் மகத்தான மாநாட்டில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் அனைவரும் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
வீர வரலாற்றின் எழுச்சிமிக்க மாநாட்டில் அனைவரும் பங்கேற்று எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்திட ஒன்றிணைவோம். நாளைய தமிழகத்தின் நிரந்தர முதல் வராக எடப்பாடி யாரை அரியணை அமர்த்திடும் கால்கோள் விழாவாக இந்த எழுச்சி மாநாடு அமையும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அணி அணியாக திரண்டு வந்து ஆர்ப்பரிப்போம், களம் வெல்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்