என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூதன முறையில் நகை- பணம் கொள்ளை
    X

    வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடப்பதையும், நகை பெட்டி கீழே கிடப்பதையும் படத்தில் காணலாம்.

    நூதன முறையில் நகை- பணம் கொள்ளை

    • திருமங்கலத்தில் நூதன முறையில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா மகன் நல்லை யன் (வயது 34). இவர் ராஜபாளையத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்து வந்துள் ளார். இவருடைய மனைவி வைஜெயந்தி. இவர் ஆலம் பட்டி கிராமத்தில் பேப்பர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட னர். வீட்டில் இளைய மகள் சத்தியா மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் மர்ம ஆசாமி ஒருவர் சத்தியாவிடம் தான் உன்னுடைய உறவினர் என்று கூறி தன்னை காட்டிக் கொண்டார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதனை அறிந்த அந்த மர்ம பெண் பாத்ரூம் செல்ல வேண்டும் என சத்தி யாவிடம் கூறியுள்ளார். சத்தியவும் வீட்டிற்குள் அந்தப் பெண்ணை பாத்ரூம் செல்ல அனும தித்துள்ளார்.

    மேலும் சத்யாவை சாப்பாடு பார்சல் வாங்கி வருமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். சத்யாவும் அருகில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்கி வாந்தார். அந்த மர்ம பெண் வீட்டின் வாசலில் நின்று கொண்டு உணவை வாங்கி கொண்டு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியா உடனே பெற்றோரி டம் கூறியுள்ளார்.

    இதுகுறித்து நல்லையன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×