search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச யோகா தினம்
    X

    சர்வதேச யோகா தினம்

    • கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அதிபர் ஜான் பிரகாசம் வாழ்த்திப் பேசினார். கல்லூரி செயலர் அந்தோணிசாமி பேசுகையில் உடல்நலம், மனநலம் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல், உள்ளம், ஆன்மா இவைகளை பாதுகாக்கலாம் என்றார்.

    செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் புனிதா, செல்வக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை நடத்தினர். இதில் உடற்கல்வியியல் துறை, தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×