search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் நோக்கி செல்கிறது: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேச்சு
    X

    மதுரை கே.கே.நகரில் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. வடக்கு தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

    பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் நோக்கி செல்கிறது: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேச்சு

    • பிரதமர் மோடியின் கடும் உழைப்பால் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் நோக்கி செல்கிறது என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
    • பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

    மதுரை

    மதுரை கே.கே.நகரில் மாநகர் மாவட்ட பா.ஜ.க. வடக்கு தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் மாநாடு நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜ்குமார், இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.

    மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் நலத்திட்டங்களை வீடு, வீடாக கொண்டு சேர்க்கிற பணியில் இந்தியா முழுவதும் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் கடும் உழைப் பால் பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக தலைவர்கள் பலருடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு இளைஞர்கள் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் தொடங்கு கின்ற வேளையில் பா.ஜ.க.வின் பலம் மேலும் அதிகரிக்கும். பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர்கள் ஜெயவேல், ஜோதிமாணிக் கம், பொதுச் செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், மகளிரணி தலைவி ஜீவா நகர் மீனா, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண்பாண்டி யன், முகேஷ்குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×