search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை தாக்கிய கணவர் கைது
    X

    மனைவியை தாக்கிய கணவர் கைது

    • மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் அருண்(வயது37).இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை இவருடைய மனைவி வித்யா(34). இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அருண் மனைவி வித்யாவை தாக்கியுள்ளார். இதனால் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

    Next Story
    ×