search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி, கல்லூரி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    மேலூர் ஆற்றுக்கால் பிள்ளையார் கோவில் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

    பள்ளி, கல்லூரி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

    • மேலூரில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அழகர் கோவில் ரோட்டில் உள்ள ஆற்றுக்கால் பிள்ளையார் கோவில்-4முனை சந்திப்பில் ஏற்படும் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த ரோட்டில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி வேன்கள், பஸ்கள் செல்கிறது. பிள்ளையார் கோவில் அருகில் தான் அரசு மருத்துவமனை உள்ளது.

    அழகர்கோவில், நத்தம் செல்லும் பஸ்கள் இந்த வழியாக செல்ல வேண்டும். அதேபோல் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.

    பெரிய கடை வீதி சந்திப்பு, பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் கால்வாய் பாலம் சந்திப்பு, சிவகங்கை மற்றும் திருவாதவூர்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் பஸ்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்று விடுகின்றன.

    இதனால் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத அவல நிலை ஏற்படுகிறது. இந்த இடங்களில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×