search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்புப்பட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம்
    X

    அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்புப்பட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம்

    • அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்புப்பட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண், நகர்புற சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். பிரச வத்திற்காக சென்றபோது பிரசவம் செய்வதில் மருத் துவ ரீதியாக பிரச்சினைகள் இருப்பதாக கூறி கடந்த 29-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனையடுத்து பிரச வத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு துறையில் அத்துமீறி தலையிட்டு மகப் பேறு துறையின் பெயரை கெடுக்கும் வண்ணம் செயல் பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபோல், அவர் பல வித அதிகார மீறல்களில் ஈடுபட்டதாக கூறி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறி விக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார் பில் டாக்டர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரி, கருப்பு பட்டை அணிந்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3-வது நாளா கின்று அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து, அரசு டாக்டர் கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர் கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×