search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி பழ வியாபாரி சாவு
    X

    விபத்தில் பலியான புயல்ராஜ்

    கார் மோதி பழ வியாபாரி சாவு

    • மேலூர் அருகே இன்று நடந்த விபத்தில் கார் மோதி பழ வியாபாரி பலியானார்.
    • பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம் பட்டியை அடுத்துள்ள அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் புயல்ராஜ் என்ற ராஜீவ்காந்தி (வயது38). இவர் அங்குள்ள நான்கு வழிச்சாலையில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இன்று காலை ராஜீவ்காந்தி நான்கு வழிச்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக புயல்ராஜ் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து கொட்டாம்பட்டி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புயல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை மேலூர் அருகே போலீசார் விரட்டி பிடித்தனர். காைர ஓட்டி வந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×